ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரபல பத்திரிக்கையின் ஆசிரியரிடம் விசாரணை!
#SriLanka
#Easter Sunday Attack
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக “ஞானார்த்த பிரதிபய” கத்தோலிக்க பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தந்தை சிறில் காமினி இன்று (19.04) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி தற்போது தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சம்பந்தப்பட்ட அழைப்பாணைக் கடிதத்தில், "ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சூழ்நிலைகள் உங்களுக்குத் தெரியும் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதால், அது குறித்து உங்களிடம் விசாரிக்க உத்தேசித்துள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



