கரையோர ரயில் பாதையில் புகையிரத சேவைகள் பாதிப்பு!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக கரையோரப் பாதையில் பயணிக்கும் புகையிரத சேவை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி நேற்று (19.03) இரவு 7.15 மணியளவில் பயணித்த அதிவேக புகையிரதம் கோட்டை மற்றும் கொம்பனி வீதி நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக கரையோர பாதையின் இரு வீதிகளும் தடைப்பட்டுள்ளதாகவும் புகையிரத தடம் புரளும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் ரயில்வே திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் என். ஜே இண்டிபோலகே குறிப்பிட்டார்.
ரயில் தடம் புரண்டதன் காரணமாக நேற்றிரவு காலி அஞ்சல் ரயில் உட்பட 4 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் இன்று (20.03) காலை கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதங்கள் தலைமைச் செயலகம் வரை மட்டுமே இயங்கும் எனவும் கொழும்பில் இருந்து செல்லும் ரயில்கள் தாமதமாகச் செல்லும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.



