அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துப்பாக்கிச்சூடு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடந்தோட்டை பொனடுவ பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாதாள உலக உறுப்பினரான அகம்பொடி சஜித் சமன் பியந்த அல்லது சமன் கொல்லாவின் வீட்டின் மீது இன்று (14.03) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல தோட்டாக்கள் வீட்டின் சுவர் மற்றும் கதவுகளைத் தாக்கியதுடன், சம்பவத்தின் போது சமன்கொல்லவின் தாயும் மூன்று சகோதரிகளும் உடனிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



