இலங்கையில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இலங்கையில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு!

இணையத்தள குற்றச் செயல்களில் அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.

இதன்படி  இந்த வருடத்தில் 423 கணினி மோசடிகள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர்  சாருக தமுனுகோல தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "இன்டர்நெட் மூலம் ஆன்லைன் வேலைகளை வழங்குவதாகக் கூறி மோசடிகள் அதிகரித்துள்ளன.

 அதே போல் இந்த ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் கிரிப்டோ-கரன்சி மோசடிகள் மற்றும் பிரமிட் மோசடிகள் அதிகரித்துள்ளன.

 2023 இல் 1,609 இணைய மோசடிகளைப் புகாரளித்துள்ளோம். இந்த ஆண்டில் , ஜனவரி 110 மாதத்தில் இதுபோன்ற மோசடிகள் பதிவாகியுள்ளன. பிப்ரவரியில் 213 இணைய மோசடிகள் பதிவாகியுள்ளன, மார்ச் மாதத்தில் இதுவரை 100 மோசடிகள் பதிவாகியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!