காணிகளை விடுவிக்கக்கோரி கேப்பாப்பிலவு மக்கள் மகஜர் கையளிப்பு

#SriLanka
Mayoorikka
1 month ago
காணிகளை விடுவிக்கக்கோரி  கேப்பாப்பிலவு மக்கள் மகஜர் கையளிப்பு

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர். 

 இன்று (11.03.2024) காலை மாவட்ட செயலகத்திற்கு சென்ற குறித்த மக்கள் மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி, மற்றும் அரசாங்க அதிபருக்கான மகஜரினையும் கையளித்துள்ளனர். 

 பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

images/content-image/2023/03/1710146653.jpg

 கேப்பாப்பிலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, வைத்தியசாலை, தேவாலயம் உள்ளிட்ட முக்கிய மக்களின் குடியிருப்புக்கள் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/2023/03/1710146679.jpg