கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் : குற்றவாளி தொடர்பில் உறவினர் வெளிப்படுத்திய தகவல்!

#SriLanka #Canada #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் : குற்றவாளி தொடர்பில் உறவினர் வெளிப்படுத்திய தகவல்!

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் வசிக்கும் 06 இலங்கையர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.  குற்றவாளியான பிராங்க் டி சொய்சா பற்றிய விவரங்களை அவருடைய  உறவினர் ஒருவர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். 

பிராங்க் டி சொய்சாவின் நடத்தை அண்மைக்காலமாக மிக விரைவாக மாறியுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், "இந்த சம்பவம் என்னை உலுக்கியது, அந்த குடும்பம் அவரை மிகவும் நல்லபடியாக நடத்தியது, அந்த குடும்பம் மிகவும் நல்ல குடும்பம், இதை கேட்டு நான் கல்லாகிவிட்டேன், இன்னும் தூங்கவில்லை"

மேலும், தனது சகோதரரின் மூத்த மகன் பிராங்க் டி சொய்சா இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடாவுக்கு வந்ததாகவும், அவர் மிகவும் அமைதியான இளைஞராகவும் மிகவும் நல்ல மனிதர்.

ஃபிராங்க் டி சொய்சா கனடாவுக்கு வந்தபின் முதல் மாதம், அவர் தனது அத்தையான அனுஷா டி சொய்சாவுடன் அவரது வீட்டில் தங்கியிருந்தார். அவர் படித்த அல்கொன்குயின் கல்லூரியில் தனுஷ்க விக்கிரமசிங்கவை ஃபிராங்க் கண்டுள்ளார். 

தனுஷ்காவின் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து ஒட்டாவாவிற்கு வந்த பின்னர், அந்த அடையாளத்தின் அடிப்படையில் தனுஷ்கா வாழ்ந்த பெரிகன் டிரைவ் வீட்டிற்கு ஃபிராங்க் குடிபெயர்ந்தார்.

பிராங்கின் அத்தை, அங்கு செல்வதற்கு முன், ஃபிராங்க் ஒட்டாவாவில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டில் வசித்து வந்ததாகவும், ஃபிராங்க் அவர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டு தனுஷ்காவின் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறினார்.

எங்களுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துவிட்டார். எங்களுடனான எல்லா தொடர்புகளையும் அவர் தடுத்துவிட்டார், எங்கள் தொலைபேசி எண்களில் இருந்தும் சமூக ஊடகங்களில் கூட எங்களை அகற்றினார். இது போன்ற ஒன்றை நான் கனவில் கூட நினைத்ததில்லை எனக் கூறியுள்ளார். 

ஆறு பேர் படுகொலை தொடர்பில் ஒட்டாவா பொலிஸாரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிராங்க் டி சொய்சா எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!