சுழிப்புரத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது!
#SriLanka
#Jaffna
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
சுழிப்புரத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஸ், புத்தர் சிலை அகற்றப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் போராடினால் மாத்திரமே எமது இனம் வாழும் என்றும், போராட்டங்களால் எதையும் சாதிக்க முடியாதென்பவர்கள், இனியாவது எம்மோடு கைகோர்ப்பார்கள் என்று நம்புகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.