மேல் மாகாணத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பரீட்சைகள் மீள நடைபெறவுள்ளன!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#Examination
Dhushanthini K
1 year ago

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளின் 10ஆம் மற்றும் 11ஆம் தரப் பரீட்சைகள் இன்று (06.03) முதல் மீண்டும் நடைபெறவுள்ளன.
தவணைப் பரீட்சையில் இதுவரை நடத்தப்படாத பாடங்களுக்கான பரீட்சைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்வுக்கு முன்னதாக அறிவியல், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால், 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எவ்வாறாயினும், புதிய வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டதன் பின்னர் உரிய தரப் பரீட்சைகள் இன்று முதல் மீண்டும் இடம்பெறும் என மேல்மாகாண கல்வித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



