ரியோ டி ஜெனிரோவில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் பலர் உயிரிழப்பு!
#SriLanka
#world_news
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ரியோ டி ஜெனிரோவின் பரந்த, குறைந்த வருமானம் உள்ள பகுதிகளில் பொலிஸார் நடத்திய சோதனையில் ஒன்பதுபேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் கமாண்ட் போதைப்பொருள் கடத்தல் குழுவால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை குறிவைத்து இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் சோதனை நடவடிக்கையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான குழந்தைகள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, பொது போக்குவரத்து மற்றும் பள்ளிகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



