பாலஸ்தீனியர்களை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்துவதற்கு தடை விதித்த பைடன்

#America #people #government #President #Palestine #deports
Prasu
2 years ago
பாலஸ்தீனியர்களை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்துவதற்கு தடை விதித்த பைடன்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் நிலையில் இருந்த பாலஸ்தீனியர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாடு கடத்தும் பாதுகாப்பை நீட்டித்துள்ளார்.

அடுத்த 18 மாதங்களுக்கு இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா பகுதியில் மோசமடைந்துள்ள மனிதாபிமான நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் 6,000 பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்படுவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர். ‘அவர்களுக்கு தற்காலிக பாதுகாப்பான புகலிடத்தை அளிக்கிறது’ என்று வெள்ளை மாளிகை கூறுகிறது

“இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய பயங்கரமான அக்டோபர் 7 பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலின் இராணுவப் பதிலடியைத் தொடர்ந்து, காசாவில் மனிதாபிமான நிலைமைகள் கணிசமாக மோசமடைந்துள்ளன” என்று பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனியக் குழுவான ஹமாஸின் எல்லை தாண்டிய ஊடுருவல், 1,200 பேரைக் கொன்றது முதல், காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல் 28,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4