பெப்ரவரி 30 ஆம் திகதி அழைத்த மோட்டார் திணைக்களத்தினர்: விழி பிதுங்கிய விண்ணப்பதாரி
#SriLanka
#Ampara
#licences
Mayoorikka
1 year ago

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பதாரி ஒருவருக்கு தர்மசங்கடமான நிலை ஒன்று ஏற்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மோட்டார் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது.
சாரதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர், சாரதி அனுமதிப்பத்திரத்தை எடுப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்.
அவ்வாறு விண்ணப்பிக்கும் சகலருக்கும் நடைமுறை சோதனைக்கான (Practical test date) திகதி அறிவிக்கப்படும். எனினும், அம்பாறை மோட்டார் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சோதனைக்கான திகதியே, விண்ணப்பித்தவருக்கு சோதனையாகியுள்ளது.
அதில், குத்தப்பட்டுள்ள இறப்பர் முத்திரையில், 2024 பெப்ரவரி 30ஆம் திகதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு வருடத்திலும் 30 ஆம் திகதி இல்லை. இதில், இவ்வருடம் 30 ஆம் திகதி வருமாறு அழைத்துள்ளனர். அவ்வாறு அழைக்கப்பட்டமையே பெரும் சோதனையானது என பலரும் தெரிவிக்கின்றனர்.



