வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு!
#SriLanka
#Vavuniya
#Police
#Investigations
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
வவுனியா குருமன்காடு கோவில் வீதி பகுதியில் கிணற்றிலிருந்து 29வயதுடைய இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டார் தேடிய போது வீட்டிலுள்ள கிணற்றில் சடலமாக காணப்படுள்ளார். 29வயதுடைய ஜெனிற்றா சயந்தன் என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக காணப்பட்டவராவர் .
இதனையடுத்து வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தடவியல் பிரிவினரின் உதவியினையும் நாடியுள்ளனர்.