தேசபந்து தென்னகோனுக்கு எதிரான முறைப்பாடு - நீதவான் தவறிழைத்துள்ளதாக அறிவிப்பு!
#SriLanka
#CourtOrder
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
7 months ago
முன்னாள் டி.ஐ.ஜி. தேசபந்து தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டை நிராகரித்த முன்னாள் கொழும்பு தலைமை நீதவான் எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது என்று கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த தீர்ப்பை அறிவித்துள்ளார்.
“கோட்டா கோ கம” போராட்டத்தின்போது போராட்டக் களத்தில் நடந்த வன்முறை தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில், தென்னகோன் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த துணைப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக (SDIG) பணியாற்றி வந்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
