இரவோடு இரவாக தீப்பற்றி எரிந்த கடைகள்!
#SriLanka
#Accident
#Lanka4
#fire
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago

மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு அருகே நேற்று இரவுஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்கள், ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



