முல்லைத்தீவு - வாகத்தளன் கடற்பகுதியில் நீராடச்சென்றவர் மாயம்!
#SriLanka
#Mullaitivu
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Missing
Dhushanthini K
1 year ago

முல்லைத்தீவு, வாகத்தளன் பகுதி கடற்கரையில் மக்கள் குழுவுடன் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று (28.01) காணாமல் போயுள்ளார்.
உறவினர்கள் குழுவுடன் வாகத்தளன் பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நீராடச் சென்ற வேளையில் இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புதுக்குடியிருப்பு 10ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே நீரில் மூழ்கி மாயமாகியுள்ளது.
கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



