கிராம அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு : வெளியான அறிக்கை!
#SriLanka
#Job Vacancy
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பரீட்சை திணைக்களத்தினால் வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கான பிரதேச செயலகப் பிரிவுகளின்படி நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்ற 4,232 பேரின் பட்டியல் இன்று (27.01) வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk இல் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு முடிவுகளின்படி 2002 கிராம அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் விரைவில் நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்கள் அரச சேவைக்குள் கொண்டு வரப்படுவார்கள் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மேலும் தெரிவித்தார்.