இலங்கையில் மருத்துவ துறை தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
#SriLanka
#doctor
#Medical
Mayoorikka
1 year ago
இலங்கையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப் பகுதி வரை 1,500 வைத்திய நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் 5,000க்கும் அதிகமானோர் வெளிநாடு செல்வதற்கு தேவையான தகைமைகளை பூர்த்தி செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களின் வெளியேற்றம் காரணமாக தற்போது 40க்கும் மேற்பட்ட சிறிய மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.