மன்னார் மாவட்டத்தின் முதல் நீதிபதியாக அரியரட்ணம் வில்பிரட் அர்ஜுன் நியமனம்!

#SriLanka #Mannar #Judge
Mayoorikka
2 years ago
மன்னார் மாவட்டத்தின் முதல்  நீதிபதியாக  அரியரட்ணம் வில்பிரட் அர்ஜுன் நியமனம்!

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 7 வருடங்களாக சிறப்பாக சேவையாற்றிய சட்டத்தரணி அரியரட்ணம் வில்பிரட் அர்ஜுன் வருகின்ற 01-12-2023 தொடக்கம் இலங்கையின் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நீதிபதியாக நியமிக்கப் படவுள்ளார்.

 மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் தனது பாடசாலை கல்வியை பெற்றுக்கொண்ட அர்ஜுன் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றில் முதலாவது இளம் வயதில் நீதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

images/content-image/2023/11/1700562446.jpg

 அண்மையில் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நீதிபதிகளை உள்வாங்குவதற்கு என இடம் பெற்ற போட்டி பரீட்சையில் தேசிய ரீதியாக சித்தியடைந்ததுடன் 14 வது நிலையையும் பெற்றுக்கொண்டார்.

images/content-image/2023/11/1700562471.jpg

 நாடளாவிய ரீதியில் டிசம்பர் மாதம் 1 திகதி 25 பேர் நீதிபதிகளாக கடமைகளை பொறுப்பேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!