மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹை சந்தித்த ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹை நேற்று வியாழக்கிழமை (16) மாலை மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி சோலிஹ் மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆகியோர் இலங்கையின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலையில் இருந்து இலங்கை எவ்வாறு படிப்படியாக மீள்கிறது என்பது குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹை நேற்று வியாழக்கிழமை (16) மாலை மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி சோலிஹ் மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆகியோர் இலங்கையின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலையில் இருந்து இலங்கை எவ்வாறு படிப்படியாக மீள்கிறது என்பது குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கைக்கு மாலைதீவு வழங்கிய உதவிகள் மற்றும் ஆதரவுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவை மாலைதீவின் முதல் பெண்மணி ஃபஸ்னா அஹமட் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பும் மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.