நடுக்கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் உடலம் பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
#SriLanka
#Death
#Police
#Investigation
#Fisherman
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Kanimoli
1 year ago

நடுக்கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் உடலம் பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. பலநாள் மீன்பிடிப் படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில் கடலில் விழுந்து உயிரிழந்த மீனவர் ஒருவரின் சடலம் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பகுதியில் இருந்து நேற்று (16) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மீன்பிடிக்க சென்ற திருகோணமலையைச் சேர்ந்த 44 வயதுடைய ஆர்.பி.நிமல் கருணாரத்ன என்பவரே நடுக்கடலில் தவறி வீழ்ந்தது உயிரிழந்திருந்தார்.
பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகைள முன்னெடுத்து வருகின்றனர்.



