பிரேசில் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் சுற்றுலா பயணிகள் 14 பேர் பலி!
#Accident
#people
#world_news
#Brazil
#Breakingnews
#ImportantNews
Mani
1 year ago

ரியோடி ஜெனிரோ
பிரேசிலில் சுற்றுலா நகரமான பார்சிலோஸ் நகரில் தரையிறங்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 12 பேர் சுற்றுலா பயணிகள் ஆவார்கள். மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. கனமழை பெய்த நிலையில், வானிலையும் தெளிவாக இல்லை. இதனால், விமானம் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளானது.



