காசாவில் அனைத்து போராளிகளையும் ஒழித்துக்கட்டி, சர்வதேச படையை அமைக்கும் முயற்சியில் ட்ரம்ப்!
காசாவில் உள்ள பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் மற்றும் பிற ஆயுதக் குழுக்களை முழுமையாக நிராயுதபாணியாக்குவதற்கான ஒரு உடன்பாட்டை அமைதி வாரியம்" எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார்.
Truth Social தளத்தில் ட்ரம்ப் இட்டுள்ள பதிவொன்றில், காசாவில் இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான "ட்ரம்பின் 20 அம்சத் திட்டத்தை செயல்படுத்துவதில் இது ஒரு முக்கிய மைல்கல்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் பல கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும், நிராயுதபாணியாக்கும் பணிகள் தொடரும்போது இஸ்ரேலியப் படைகள் திரும்பப் பெறப்படும் என்றும் தெரிவித்த அவர், அந்தப் பகுதியைப் பாதுகாப்பதற்காக ஒரு சர்வதேச நிலைப்படுத்தல் படை புதிய பாலஸ்தீனிய காவல் படையுடன் இணைந்து செயல்படும் என்றும் கூறியுள்ளார்.
"பாலஸ்தீனிய மக்களுக்கு உதவுவதற்காக அமைதி வாரியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றும் ஒரு புதிய பாலஸ்தீனிய அரசாங்கத்தால் காசா இறுதியாக ஆளப்படுவதை நோக்கிய ஒரு முக்கியமான படி இந்த உடன்பாடு," என்றும் ட்ரம்ப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே