உக்ரைனால் இந்த வகை ஏவுகணையை தடுக்க முடியாதுள்ளது

#world_news #Russia #Missile #Ukraine #Lanka4 #லங்கா4 #உக்ரைன்
உக்ரைனால் இந்த வகை ஏவுகணையை தடுக்க முடியாதுள்ளது

உக்ரைன் ரஷ்ய போர் மூண்டு 500 நாட்கள் கடந்துள்ள நிலையில் உக்ரைனால் இந்த இந்திய - ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணையை சுட்டு வீழ்த்த முடியவில்லை.

அந்த ஏவுகணைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி துல்லியமாக இலக்கை தாக்குகிறது என்று உக்ரைன் விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இது ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது.

 இந்த ஏவுகணை இந்தியாவில் பிரம்மோஸ் என்றும் ரஷ்யாவில் 'பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்' என்றும் அழைக்கப்படுகிறது.

ரஷ்யா - உக்ரைன் இடையே 500 நாட்களுக்கும் மேலாக போர் நீடிக்கும் நிலையில் இரு நாடுகளும் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றன.

 ரஷ்யாவின் கேஎச்-55, 3எம்-14 காலிபர், ஆர்-27 இசட்ஒய்பி, ஆர்கே- 55 கிரானட், ஆர்எஸ்எம்-56 புலாவா, ஆர்-29 ஆர்எம் ஸ்டில், ஆர்-29 வைசோட்டா, ஓடிஆர்-21 டோக்கா, எஸ்எஸ்-1 ஸ்குட், 3எம்-54 காலிபர் கிளப், ஆர்எஸ்டி-10 பயனீர், 9கே720 இஸ்கந்தர், ஆர்எஸ்-26 ரூபேக், ஆர்எஸ்-28 சர்மட் உள்ளிட்ட பல்வேறு வகையான ஏவுகணைகள் போரில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட உக்ரைனுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அதிநவீன ஆயுதங்கள், ஏவுகணைகளை தாராளமாக வழங்கி வருகின்றன.

இந்த ஏவுகணைகள் மூலம் ரஷ்ய ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தினாலும் பிரம்மோஸ் என்றழைக்கப்படும் குறிப்பிட் டவகை ஏவுகணைகளை மட்டும் சுட்டு வீழ்த்த முடியவில்லை என்று உக்ரைன் விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது ரஷ்யாவின் 'பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்' ஏவுகணை ஆகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!