அரச ஊழியர்களுக்கு திறந்த பல்கலைக்கழகத்தில் இலவச பாடநெறி
அரச ஊழியர்களுக்கு திறந்த பல்கலைக்கழகத்தில் இலவசமாக பாடநெறிகளை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் நாத்தாண்டிய கற்கை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரச உத்தியோகத்தர்களின் அறிவை விருத்தி செய்வதற்கு அரசாங்கத்தின் பணத்தை செலவழிக்கும் அடிப்படையில் திறந்த பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்கு உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
தனிமனித மன வளர்ச்சிக்கு மருந்தாக இருக்கும் கல்வி நிறுவனங்களை உருவாக்குவது எதிர்கால முதலீடு.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலை சந்தைகளுக்கு ஏற்றவாறு படிப்புகளை வடிவமைக்கவும் அந்த படிப்புகளுக்கான நேரத்தை சீரமைப்பதில் தங்களைப் பற்றியும் அவர்களின் செயல்களைப் பற்றியும் தர்க்கரீதியாகவும் மனசாட்சியுடனும் செயல்படக்கூடிய நபர்களை உருவாக்கவும் அதற்கு நேரம் ஒதுக்குங்கள் எனஇராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.