டாடா குழுமத்துக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையை கையளிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
#SriLanka
#Lanka4
#company
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

இந்தியாவின் ‘டாடா குழுமத்துக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையை கையளிப்பது தொடர்பில், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப் பெரிய வணிகக் குழுமமான 'டாடா நிறுவனம்' ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா ஆகிய விமான நிறுவனங்களை தன்வசம் கொண்டுள்ளது.
அந்தவகையில் , குறித்த நிறுவனம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீதும் கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார் .



