சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை பத்து மணித்தியால நீர் வெட்டு அமுல்
#Colombo
#Tamil People
#water
#Lanka4
Prabha Praneetha
2 years ago

கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை பத்து மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரை நீர் வெட்டு அமுலாகவுள்ளது.
இன்று , கொலன்னாவ நகரசபை பகுதி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர அத்துல்கோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.



