50வது பிறந்த நாளையொட்டி சச்சின் டெண்டுல்கர் உருவம் பொறித்த பட்டு புடவையை பரிசாக வழங்கிய நபர்
#India
#Cricket
#Player
#Birthday
#Tamilnews
#Sports News
#Lanka4
Prasu
2 years ago

தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவைச் சேர்ந்த வெல்டி ஹரி பிரசாத், சமீபகாலமாக தனித்துவமான பட்டுப் புடவைகளை தயாரித்து வருகிறார்.
இந்த முறை அவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலியின் உருவங்கள் கொண்ட நேர்த்தியான பட்டுப்புடவையை உருவாக்கியுள்ளார்.
சச்சினின் 50-வது பிறந்தநாள் பரிசாக இந்த புடவையை அவருக்கு வழங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஹரி பிரசாத், ஐதராபாத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் வி சாமுண்டீஸ்வரநாத்திடம் சேலையை வழங்கினார்.
மேலும் பட்டு குர்தா மற்றும் பைஜாமா போன்றவற்றையும் வழங்கினார். சச்சின் டெண்டுல்கருக்கு பரிசாக 47 அங்குல அகலமும் 60 அங்குல நீளமும் கொண்ட சேலையை தயாரிக்க 20 நாட்கள் ஆனதாக அவர் கூறினார்.



