இலங்கையில் அதிகரிக்கும் கோவிட் தொற்று: முகக்கவசமா? மனிதனா? முன் எச்சரிக்கை
#SriLanka
#Covid 19
#Covid Vaccine
#Covid Variant
#Health
#Health Department
Mayoorikka
2 years ago
இலங்கையில் மீண்டும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையில் நேற்றைய தினம் (25.04.2023) புதிதாக நான்கு கோவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதன்படி நேற்றைய தினம் வரை உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை 672139 எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை பொது இடங்களிற்கும் மக்கள் அதிகளவில் கூடுமிடங்களிற்கும் செல்லும் வேளையில் முககவசம் அணிந்து செல்லுமாறு சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தியுள்ளனர்.