மன்னார் பாடசாலையில் மாணவனை காலால் உதைந்த போதகர் - அவசர தொலைபேசிக்கு முறைப்பாடு
#Police
#Arrest
#Mannar
#Lanka4
Kanimoli
2 years ago

கடந்த சில தினங்களுக்கு முன்னர்,மன்னார் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ பாடசாலை ஒன்றின் பதில் அதிபரான போதகர் ஒருவர் மாணவனை காலால் உதைத்த சம்பவம் தொடர்பில் வடக்கு கல்வி அமைச்சின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரன் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார்.
இந் நிலையில் குறித்த பதில் அதிபரான போதகர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.



