கடுமையான வெப்பமான காலநிலை காரணமாக சுவாச நோயாளிகள் ஆபத்தில்
#breathe
#hot
#weather
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

தற்போது அதிக வெப்பம் நிலவி வருவதால் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நாளில் இன்புளுவன்சா வைரஸும் பரவி வருவதால் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்டகால நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென சுவாச நோய் தொடர்பான நிபுணர் டொக்டர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார்.
நீண்ட காலமாக சுவாச நோய்களால் அவதிப்படுபவர்கள் வெப்பமான காலநிலையினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை சந்தித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சுவாச நோய் தொடர்பான நிபுணரான வைத்தியர் துஷாந்த மத்கெதர மேலும் சுட்டிக்காட்டினார்.



