துறைமுக அபிவிருத்தியினூடாக 25 வருடங்களில் ஏற்படப்போகும் மாற்றம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

#Ranil wickremesinghe #Colombo #Development #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
 துறைமுக அபிவிருத்தியினூடாக  25 வருடங்களில் ஏற்படப்போகும் மாற்றம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

புதிய கொழும்பு வடக்கு துறைமுகத் திட்டத்துடன், நாட்டிலுள்ள துறைமுக அபிவிருத்தித் திட்டங்களினூடாக, அடுத்த 25 வருடங்களில், கப்பல் போக்குவரத்துத் துறையில் மாபெரும் நாடாக இலங்கை மாறும் சாத்தியம் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

துறைமுகத் துறையில் எதிர்கால சேவை தேவையை கருத்தில் கொண்டு, இலங்கை துறைமுக அதிகாரசபையானது, பிரித்தானியாவின் AECOM நிறுவனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் கொழும்பு வடக்கு துறைமுகத்தை அபிவிருத்தி செய்து வருகிறது.

அதற்காக நடத்தப்பட்ட கொழும்பு வடக்கு துறைமுகத்தின் 30 வருட அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

“அடுத்த 25 ஆண்டுகளில், இந்தியா, வங்கதேசம், மலேசியா மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளில் வங்காள விரிகுடாவில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்படும்.

எனவே, திருகோணமலை துறைமுகத்தை வங்காள விரிகுடாவில் சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்" என்றார்.

"அம்பாந்தோட்டை துறைமுகம் தற்போது முழு கொள்ளளவில் இயங்கவில்லை. ஆனால் அடுத்த 10 முதல் 15 வருடங்களில் அம்பாந்தோட்டை பகுதியில் 4,000 ஏக்கர் நிலம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், எண்ணெய் சுத்திகரிப்பு முனையமும் அமைக்கப்படவுள்ளது. அதிகரிக்கும்."

“நாங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வோம் மற்றும் மத்தள விமான நிலையமானது வர்த்தக ரீதியாக சாத்தியமாகும்.

அத்துடன், பலாலி விமான நிலையத்தையும் திறந்து வைத்தோம். கொழும்பு-வடக்கு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை இலங்கை துறைமுக அதிகார சபையும் ஆலோசனைப் பிரிவும் வழங்கியுள்ளன.

அதன்படி, இந்தியப் பெருங்கடலை கடற்படை மையமாக மாற்றும் திறன் எங்களிடம் உள்ளது, அதை நாங்கள் செய்ய வேண்டும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!