எவரெஸ்ட் சிகரத்தில் தனது 20வது நாள் பயணத்தில் 20,075 அடி தூரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் ‘முத்தமிழ் செல்வி’!
#world_news
Mani
2 years ago

விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி. சிறுவயது முதலே மலையேறுவதில் ஆர்வம் கொண்ட இவர், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பதே இவரது கனவாக இருந்து வந்தது.
அதனை நிறைவேற்றும் விதமாக கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்ற முத்தமிழ் செல்வி ஏப்ரல் 20-அன்று எவரெஸ்ட் சிகரத்தில் 19-வது நாள் பயணத்தை கடந்து, 20 ஆயிரத்து 75 அடி தூரம் ஏறி சாதனை படைத்துள்ளார்.



