உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
#ImportantNews
#Temple
Mani
2 years ago
உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த மாதம் 17-ம் தேதி பூச்சொரிதலுடன் தேர்த் திருவிழா தொடங்கிய நிலையில், நேற்று முன்தினம் பகல் 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேர் கலசம் பொருத்தப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற தேரோட்டத்தை, மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வடம் பிடித்து தொடங்கிவைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். கோயிலில் இருந்து புறப்பட்ட தேர், எம்.எஸ்.லைன் வழியாக காபி ஹவுஸ் சந்திப்பு, மணிக்கூண்டு, ஐந்து லாந்தர் உட்பட முக்கிய சாலைகள் வழியாக வந்தது.
பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு கல் உப்புகளை தூவி வழிபட்டனர்.