பிரதமர் மோடியை எந்த அளவுக்கு விமர்சிக்கிறார்களோ, அந்த அளவுக்கு பாஜக வளரும் - அமித்ஷா உறுதி

#India #PrimeMinister
Mani
3 years ago
பிரதமர் மோடியை எந்த அளவுக்கு விமர்சிக்கிறார்களோ, அந்த அளவுக்கு பாஜக வளரும் - அமித்ஷா உறுதி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திப்ருகரில் பாஜக அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக அஸ்ஸாம் செல்வதற்கு முன்பு அருணாச்சலப் பிரதேசம் சென்றார்.

ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் காங்கிரசின் கோட்டையாக இருந்தது. இருப்பினும், ராகுல் காந்தியின் சமீபத்திய பாதயாத்திரை இருந்தபோதிலும், 3 வடகிழக்கு மாநில தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது.

அன்னிய மண்ணில் இந்தியாவையும், அரசையும் ராகுல் காந்தி தொடர்ந்து அவதூறாகப் பேசினால், வடகிழக்கு மாநிலங்களில் இருந்ததைப் போல நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்தும் காங்கிரஸ் வெளியேற்றப்படும்.

பிரதமர் மோடியை எந்த அளவுக்கு விமர்சிக்கிறார்களோ, அந்த அளவுக்கு பாஜக வளரும்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக உள்ளார்.

கடந்த காலத்தில், அஸ்ஸாம் என்றாலே, போராட்டமும், பயங்கரவாதமும்தான் நினைவுக்கு வரும். ஆனால் இப்போது மெல்ல மெல்ல அமைதி தவழ்கிறது.இதனால் மக்கள் இசைக்கு நடனமாடுகிறார்கள்.

அசாமின் 70% பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4