மத்திய வங்கி திருத்தச் சட்டமூல விதிகள் அரசியலமைப்புக்கு முரணானது! மனு தாக்கல்

#SriLanka #Bank #Central Bank #Court Order #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
மத்திய வங்கி திருத்தச் சட்டமூல விதிகள் அரசியலமைப்புக்கு முரணானது! மனு தாக்கல்

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் சில விதிகள் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

பிரதிவாதியாக  சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

முன்மொழியப்பட்ட "மத்திய வங்கி திருத்த மசோதாவில்" உள்ள சில விதிகள், அந்த வங்கியின் சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக மனுதாரர் கூறுகிறார்.

இந்த திருத்தப்பட்ட சட்டமூலத்தின் ஊடாக மத்திய வங்கியின் விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு பொறுப்பான அமைச்சர் அனுமதிக்கப்படுவதோடு பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வங்கி விடுவிக்கப்படும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள் இறையாண்மையை மீறுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள கேள்விக்குரிய விதிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் 1, 2, 3, 4 ஆகிய பிரிவுகளை மீறுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு சிறப்பு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டு, பொது வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மனு மூலம் கோரப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!