தூய்மையின்றி காணப்படும் வடமராட்சி தேற்கு மேற்கு பிரதேச சபை ஒன்றுகூடல் மண்டப மலசலகூடம்!
#Jaffna
#Health
#Healthy
#SriLanka
#Lanka4
Kanimoli
2 years ago

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசபையின் ஒன்று கூடல் மண்டபத்தில் அமைந்துள்ள மலசல கூடம் தூய்மையாக பராமரிக்கப்படாமலும் அதனுடைய தண்ணீர் பயன்பாட்டு இணைப்புக்கள் பழுதடைந்துள்ளமையாலும் அது துர்நாற்றம் வீசுவதுடன் அதனை பயன்படுத்துவோரை அசௌகரியத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.
சுகாதார வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய பிரதேச சபைகள் இவ்வாறு தமது சபை வளாகத்திற்குள்ளேயே உள்ள மலசல கூடத்தை தூய்மை பேணாது விடுவது என்பது அவர்களது சேவை தொடர்பில் மக்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது



