ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், கஞ்சா பாவிப்பதற்கு முயன்றவர் கைது
#drugs
#Arrest
#Police
#Jaffna
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னமடு பகுதியில், கஞ்சா பாவிப்பதற்கு முயன்றவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவர் இவ்வாறு ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நயினாதீவு பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



