கோட்டாபாய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்த அதிர்ச்சியில் கிணற்றில் குதித்த முதியவர்!

Nila
3 years ago
கோட்டாபாய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்த அதிர்ச்சியில் கிணற்றில் குதித்த  முதியவர்!

கோத்தபாய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகரின் அறிவிப்பு இன்று காலை ஊடகங்களால் வெளியிடப்பட்டதையடுத்து அதிர்ச்சியடைந்த 66 வயதுடைய நபர் ஒருவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார்.

தொம்பே பிரதேசத்தில் தற்கொலை முயற்சி ஒன்று பதிவாகியுள்ளது.

நீண்டகாலமாக ராஜபக்ச குடும்பத்தை ஆழமாக காதலித்து வந்த இந்த நபர், கோத்தபாய பதவி விலகினால் தான் வாழமாட்டேன் என நேற்று முதல் அங்குள்ள மக்களிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வீட்டினுள் இருந்தவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலைக்கு முயன்றவரின் மகன் பல நாட்களாக கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை இங்கு விசேட நிகழ்வாகும்.

மகனுக்கும் தந்தைக்கும் இடையில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4