இடைக்கால ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட களமிறங்கும் டலஸ்
Kanimoli
2 years ago

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய பலர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றத.
இதன்படி, பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இடைக்கால ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனுக்கன் அடுத்த வாரம் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்த போராட்டங்களால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச் சென்றதுடன், பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.
எனினும், இடைக்கால ஜனாதிபதியாக ஒருவர் நியமிக்கப்படும் வரை ரணில் விக்ரமசிங்க பதவி வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



