நெருக்கடியை தீர்ப்பதற்கு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட உத்தரவு!
Mayoorikka
2 years ago

பயன்பாட்டுக்கு உட்படாத நிலையில் காணப்படும் நிலங்களை கண்டறிந்து உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
பெருந்தோட்ட தோட்டக் கம்பனிகளிடம் 9 ஆயிரம் ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலப்பரப்பு பயப்பாடு இன்றி காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
23 கம்பனிகளுக்குச் சொந்தமான குறித்த இடங்களில் ஏற்ற பயிர்களை இனங்கண்டு அவற்றை பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் நேற்று (3) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.



