மனைவியை கொலை செய்த கணவன் பொலிஸில் சரண்!
#SriLanka
#Murder
#Lanka4
Shana
3 years ago
அக்மீமன, அங்கொக்காவல பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
குடும்ப தகராறு காரணமாகவும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவும் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அங்கொக்காவல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலையை செய்த சந்தேக நபர் அக்மீமன பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.