தேசிய நினை­வுச் சின்­ன­மாக அர­சி­த­ழில் பதிவுசெய்யப்பட்ட செந்­தோ­சாத் தீவின் சிலோசோ கோட்டை

Keerthi
3 years ago
தேசிய நினை­வுச் சின்­ன­மாக அர­சி­த­ழில் பதிவுசெய்யப்பட்ட செந்­தோ­சாத் தீவின் சிலோசோ கோட்டை

செந்­தோ­சாத் தீவின் சிலோசோ கோட்டை தேசிய நினை­வுச் சின்­ன­மாக அர­சி­த­ழில் பதி­வு­செய்­யப்­பட வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சிங்­கப்­பூ­ரில் மிக­வும் சிறந்த முறை­யில் பாது­காக்­கப்­பட்ட 19ஆம் நூற்­றாண்டு கோட்­டை­யாக சிலோசோ கோட்டை விளங்­கு­கிறது என தேசிய மர­பு­டைமை வாரி­யம் நேற்று கூறியது. மேலும், நாட்­டின் போர்க்­காலத்தை நினை­வு­ப­டுத்­தக்­கூ­டிய முக்­கி­ய­மான தள­மா­க­வும் இது விளங்­கு­வ­தாக வாரி­யம் குறிப்­பிட்­டது.

தற்­போது வர­லாற்று முக்­கி­யத்­து­வம் வாய்ந்த பகு­தி­யா­கத் திக­ழும் இந்­தக் கோட்டை, 1878ஆம் ஆண்டு எழுப்­பப்­பட்­டது. 19ஆம் நூற்­றாண்­டின் பிற்­ப­கு­தி­யில் வர்த்­த­கத் துறை­மு­க­மாக சிங்­கப்­பூரை உரு­வாக்­கு­வ­தன் அவ­சி­யத்தை கவ­னத்­தில் கொண்டு உத்­தி­பூர்வ கட­லோ­ரக் கோட்­டைப் பகு­தி­க­ளில் ஒன்றாக இக்­கோட்டை கட்­டப்­பட்­டது.

கடல்­வ­ழித் தாக்­கு­த­லிலிருந்து சிங்­கப்­பூ­ரைப் பாது­காக்­கும் வகை­யில் வடி­வ­மைக்­கப்­பட்ட சிலோசோ, இரண்­டாம் உல­கப் போரின்போது சிங்­கப்­பூ­ரின் மேற்­குப் பகு­தி­யி­லி­ருந்து ஜப்­பா­னி­யத் துருப்­பு­களை நோக்­கிச் சுடு­வ­தற்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

அதன் விளை­வாக, புலாவ் புக்­கோம், புலாவ் சிபா­ரோக் ஆகி­ய­வற்­றின் அரு­கில் இருந்த எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் அழிக்­கப்­பட்­டது. ஜப்­பா­னி­யத் துருப்­பு­கள் ஒரு வள­மா­கப் பயன்­ப­டுத்­து­வ­தைத் தடுக்க அந்­நி­லை­யம் அழிக்­கப்­பட்­டது.

தேசிய மர­பு­டைமை வாரி­யத்­தின் roots.gov.sg எனும் இணை­ய­வாசல் இவ்­வாறு விவ­ரிக்­கிறது. 1963ஆம் ஆண்­டுக்­கும் 1966ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் சிலோசோ கோட்­டையை 10வது சிங்­கப்­பூர் கூர்கா துப்­பாக்­கிப் படைப் பிரிவு பயன்­ப­டுத்­தி­யது. இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்த எதி­ரி­கள் சிலர் சிங்­கப்­பூ­ரின் செந்­தோசா தீவி­லும் கெப்­பல் துறை­மு­கத்­தி­லும் நுழையாதபடி பார்த்துக்­கொள்ள அவர்­கள் அங்கு நிலை­கொண்­டி­ருந்­த­னர்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!