தவறான தீர்ப்பால் 43 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த சோகம்..!!
கன்சாஸ் சிட்டி (அமெரிக்கா): கொலை வழக்கில் தண்டனை பெற்று 43 ஆண்டுகள் சிறையில் இருந்தவருக்கு, தற்போது விடுதலை கிடைத்துள்ளது.
இவரது நிலையாஇ அறிந்த மக்கள் 14.5 லட்சம் டாலர்கள் அதாவது சுமார் ரூ.11 கோடி திரட்டியுள்ளனர். அந்த நபர் தவறாக தண்டிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் நீதிபதி அவரது தண்டனையை ரத்து செய்தார். இதைத் தொடர்ந்து, மக்கள் நன்கொடை வசூலிக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கினர்.
நன்கொடை சேகரிக்கும் பிரச்சாரம்
மிட்வெஸ்ட் இன்னசென்ஸ் திட்டத்தின் நோக்கம் அப்பாவி மக்களுக்கு உதவுவதாகும். அதில், தவறான தீர்ப்பின் காரணமாக நீண்ட காலம் சிறையில் வாடி வந்த கெவின் ஸ்டிரிக்லேண்டின் (Kevin Strickland) விடுதலைக்காக பிரச்சாரம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிறையில் இளமை காலத்தை தொலைத்தவருக்கு கண்ணியமான வாழ்க்கை வாழ உதவிடும் வகையில், நன்கொடைகளை திரட்ட GoFundMe என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. 62 வயதான ஸ்டிரிக்லேண்ட் மீதமுள்ள காலத்தை கவுரவமாக கழித்திட இந்த பணம் உதவும். தொலைத்த இளமை பருவத்தை திரும்ப பெற முடியாது என்றாலும், இந்த பணம் அவருடையை வாழ்க்கையை எளிதாக்கும்.
1978 வழக்கு
மிசோரி மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி செவ்வாயன்று அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். சனிக்கிழமை மாலை வரை, ஸ்டிரிக்லேண்டிற்கு உதவுவதற்காக $14.5 மில்லியனுக்கும் அதிகமான நன்கொடைகள் திரட்டப்பட்டுள்ளன. கெவின் ஸ்ட்ரிக்லேண்ட் குற்றவாளி என தவறாக தீர்ப்பு வழ்ங்கப்பட்ட வழக்கு குறித்து கூறிய அவர், குறிப்பிட்ட கொலை சம்பவத்தின் போது தான் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருப்பதாகவும், 1978 கொலைகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறினார். சம்பவம் நடந்த போது அவருக்கு 18 வயது. சிறையில் இருந்து வெளிவந்த அவர், 'கடவுளுக்கு நன்றி' என்றார்.