கொரோனா பரவல் எதிரொலி- சீனாவில் 1500 மாணவர்கள் விடுதி, ஓட்டல்களில் அடைத்து வைப்பு

#Covid 19
Prasu
4 years ago
கொரோனா பரவல் எதிரொலி- சீனாவில் 1500 மாணவர்கள் விடுதி, ஓட்டல்களில் அடைத்து வைப்பு

கொரோனா தொற்று முதன் முதலில் சீனாவில் தான் ஏற்பட்டது. பின்னர் உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது.

அதன்பிறகு பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் உச்ச நிலையில் இருந்தாலும் சீனாவில் கட்டுக்குள்ளேயே இருந்தது. இந்தநிலையில் சீனாவின் டலியான் நகரில் உள்ள ஷுவாங்கே பல்கலைக்கழக நகரில் ஏராளமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சுமார் 1500 மாணவர்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதிகளிலும், ஓட்டல்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு காணொலி காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கான உணவுகள் அவர்களின் இருப்பிடத்திற்கே அனுப்பப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!