பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக தீர்மானம்
Prabha Praneetha
3 years ago

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதை நிலைமையில், கோவிட் வைரஸ் தொற்று நோய் மீண்டும் அதிகரித்தால் அது கட்டுப்படுத்த முடியாத மட்டத்திற்கு செல்லலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
மக்களின் இரண்டு வார செயற்பாடுகளின் பின்னரே மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் முடிவுக்கு வர முடியும் என பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.



