NHSன் புதிய சோதனை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.. உயிர்களை காக்க முயற்சி..!!

Keerthi
3 years ago
NHSன் புதிய சோதனை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.. உயிர்களை காக்க முயற்சி..!!

மக்களுக்கு புற்றுநோயின் அறிகுறிகள் உடலில் தோன்றுவதற்கு முன்பே இரத்த பரிசோதனையில் அவற்றை கண்டறிவதற்க்கான புதிய சோதனையை NHS தொடங்கியுள்ளது.

பிரித்தானியாவில் மக்களுக்கு புற்றுநோயின் அறிகுறிகள் உடலில் தோன்றுவதற்கு முன்பே இரத்த பரிசோதனையில் அவற்றை கண்டறிவதற்கான புதிய சோதனையை NHS தொடங்கியுள்ளது. அதாவது விஞ்ஞானிகள் 'கேலரி' என்ற இரத்த பரிசோதனை மூலம் 50க்கும் அதிகமான புற்றுநோயை கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த இரத்த பரிசோதனை மூலம் மருத்துவ அறிகுறிகள் காண்பிக்கப்படுவதற்கு முன்பே மிகவும் துல்லியமாக புற்றுநோயை கண்டறிய முடியும். மேலும் இந்த இரத்த பரிசோதனை மூலம் பல வகையான புற்றுநோய்களையும் எளிதாக கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மார்பக, கர்ப்பப்பை வாய், புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் குடல் புற்றுநோய்களுக்கான ஸ்கிரீனிங் நடைமுறைகளுக்கும் 'கேலரி' இரத்த பரிசோதனை துணைபுரிகின்றது.

இதற்கிடையில் அமெரிக்காவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கும் இந்த இரத்த பரிசோதனை பரிந்துரைக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த 'கேலரி' இரத்த பரிசோதனையை பிரித்தானியாவில் NHS தொடங்கியுள்ளது. அதன்பின் நாட்டில் உள்ள எட்டு பகுதிகளுக்கும் 140,000 தன்னார்வலர்கள் சேர்க்கும் பணியிலும் NHS ஈடுபட்டுள்ளது. மேலும் 50 முதல் 77 வயதுக்குட்பட்ட பல்வேறு பின்னணியிலிருந்தும் இனத்தவர்களிடமும் இந்த பரிசோதனையில் பங்கேற்குமாறு கடிதங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் 'கேலரி' என்ற இரத்த பரிசோதனை மூலம் மிகவும் ஆபத்தான பல்வேறு புற்றுநோய்களையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து பல உயிர்களை காப்பாற்ற முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து NHS தலைமை நிர்வாகி அமண்டா பிரிட்சார்ட் கூறியதாவது "இந்த 'கேலரி' இரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயை ஆரம்பத்திலேயே மிகவும் விரைவாகவும் எளிமையாகவும் கண்டறிய முடியும். இதுவே மருத்துவ சிகிச்சையில் ஒரு புரட்சியின் தொடக்கம் எனவும் கூறலாம். அதாவது மக்களுக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் உடலில் தோன்றுவதற்கு முன்பே அவற்றை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் மக்கள் உயிர்வாழ்வதற்கான சிறந்த வாய்ப்பை உருவாக்கி கொடுக்க முடியும்" என்று கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!