ஹோர்முஸ் ஜலசந்தியில் 2 ஈரானியப் படகுகளை அழித்த அமெரிக்க ராணுவம்
ஹோர்முஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கடற்படையின் ஆளில்லா விமானத்தைக் கைப்பற்ற ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) முயன்றதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு ஈரானியப் படகுகளை அமெரிக்க ராணுவம் அழித்ததாக தெரிவித்துள்ளது.
ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள கர்கான் துறைமுக நகரம் மற்றும் லராக் தீவுக்கு அருகே மீன்பிடிப் படகுகளை அமெரிக்கா தாக்கியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், அடையாளம் தெரியாத எண்ணிக்கையிலான மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணை ஆளுநர் அஹ்மத் நஃபிசி கூறியதாக மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஆளில்லா மேற்பரப்புக் கப்பலைக் கைப்பற்றுவதற்காக IRGC இந்தப் படகுகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, ஒரு அமெரிக்க ஆளில்லா விமானம் இரண்டு ஏவுகணைகளைச் செலுத்தியதில், இரண்டு படகுகளும் அழிக்கப்பட்டு, அதில் இருந்த பெரும்பாலானோர் கொல்லப்பட்டதாக ஒரு அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.