சவூதி அரேபியாவின் இராணுவத் தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் - தாக்குதல் தொடரும் எனவும் எச்சரிக்கை
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெற்கு சவூதி அரேபியாவில் உள்ள ஒரு இராணுவத் தளத்தின் மீது பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சவூதி அரேபியாவில் உள்ள 'ஷரூரா' இராணுவத் தளத்தில் உள்ள ஆயுதக் கிடங்குகள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அக்குழுவின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி தெரிவித்துள்ளார்.
யேமன் மீது சவூதி அரேபியா நடத்தும் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், இந்தத் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் நாட்டிற்குள் மேலும் தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் எச்சரித்தார்.
இருப்பினும், ஹூதிகளின் இந்த அறிக்கை குறித்து சவூதி அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
ஆனால், தென்மேற்கு ஜசான் பிராந்தியத்தில் உள்ள அல்-துவால் பகுதியில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாகவும், ஒரு மசூதி, பல கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாகவும் சவூதி குடிமைப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே