தெஹிவளையில் தவறான இலக்கில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறார்கள் பலி!
தெஹிவளை – சிறிசங்கபோ வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல், தவறான இலக்கை குறிவைத்து நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த இரு சிறார்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் தந்தை காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணைகளில், காயமடைந்த நபரின் சகோதரர், திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான படோவிட்ட அஸங்கவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘கொஸ்மல்லி’ என்பவரின் நெறிப்படுத்தலின் கீழ் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி, தாக்குதலுக்கான உண்மையான இலக்கு மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே