வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது உயிரிழக்கும் தொழிலாளர்களின் நஷ்டஈட்டுத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை

#Death #government #LANKA4 #Foriegn #compensation #Workers #SriLankan #L4
Prasu
1 hour ago
வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது உயிரிழக்கும் தொழிலாளர்களின் நஷ்டஈட்டுத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது உயிரிழக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மரண நஷ்டஈட்டுத் தொகையை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்க முடிந்த மிகப்பெரிய நிவாரணம் என்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது உயிரிழந்த 50 புலம்பெயர் தொழிலாளர்களின் உறவினர்களுக்கு நஷ்டஈடாக 7 கோடி ரூபா தொகையை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4